skip to main |
skip to sidebar
malarum kaalaiyil
uthayamanathu
aathavan maddum alla
un ninaivugalum thaan...
நிலவே..
உன் அழகை கண்டு
கதிரவனே அஸ்தமனம் ஆகிறான்.!
நான் மட்டும் துயிலாமல்
உன்னோடு!
உன்னை
பேச விடாமல்
நான் மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறேன்...
மௌனத்தில் நீ பேரழகி!
நிலவே....
நீ உலகுக்கு உன்னை
பகிர்ந்து கொடு.
ஆனால்,
எனக்காக மட்டும்
வாழ்ந்து விடு இரவில்..!
நான் கவிஞராக
இருக்கும் வரை
நீ நிலவாகவே இரு...
உலகே அழைக்கிறது என்னை
ஆனால்...
உனக்காக மட்டும் யாரும்
தொட முடியாத தூரத்தில் நான்.
எப்போது வருவாய் அன்பே..!
நிலவே..
நீயும் பெண்தான்
நான் பார்ப்பதைக் கண்டு
மேக திரையில்
உன் முகம் மூடுகிறாய்.!